கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி கலந்து கொண்டு சிறப்பித்தார். மாவட்ட ஒன்றிய நகரக் கழக நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.