கிருஷ்ணகிரியில் தி.மு.க., நகர நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. நகர செயலாளர் எஸ்.கே. நவாப் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் பரிதா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நகர செயலாளர் நவாப் தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்தும், மேலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி நகரில் தி.மு.க.வுக்கு அதிக வாக்குகள் வாங்கித் தருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று பேசினார். நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.