கிருஷ்ணகிரி: ஒத்துழைத்தால் குற்றங்கள் குறையும்

55பார்த்தது
கிருஷ்ணகிரி: ஒத்துழைத்தால் குற்றங்கள்  குறையும்
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் ஹவுசிங் போர்டு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் குற்ற தடுப்பு விழிப்புணர் முகாம் மாவட்ட எஸ்பி தங்கதுரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது தீபாவளி சீட்டு நகை சீட்டு ஏல சீட்டு போன்றவற்றை போலியான நபரிடம் சீட்டு கட்டி ஏமாற வேண்டாம்,

உங்கள் பணத்தை பாதுகாக்க வங்கியில் செலுத்தலாம் அல்லது தபால் நிலையத்தில் சேமித்து வைக்கலாம், நீங்கள் வெளியூருக்கு செல்லும் பொழுது உங்கள் வீட்டில் இருக்கும் பணத்தையும் நகையையும் பத்திரமாக வங்கியில் லாக்கரில் வைத்துவிட்டு செல்ல வேண்டும், அனைவரும் வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்,

உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக போலீஸ் அழைக்க வேண்டும்,
காவல்துறை உங்களுக்காக 24 மணி நேரம் பணி செய்யக்கூடிய துறை எனவே உங்களுக்கு எப்பேர்பட்ட பிரச்சனை என்றாலும் காவல்துறையை அணுகலாம் காவல்துறை உங்களுக்காக பணி செய்ய நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

தொடர்புடைய செய்தி