கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவேரி மருத்துவமனை சார்பாக உலக சிறுநீரகதின விழிப்புணர்வு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. 2006ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் 2-வது வியாழன் அன்று கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும். இது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஒன்றிணைத்து "அற்புதமான சிறுநீரகங்கள்" விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு உலகளாவிய பிரச்சாரம். காவேரி மருத்துவமனை சிறுநீரக மருத்துவர் சாய்மீரா நாடகத்தை துவக்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.