கிருஷ்ணகிரி அடுத்துள்ள காட்டிநாயனப்பள்ளி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரியின் நிறுவனர், தலைவர், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.