ஓசூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
ஓசூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் திம்மராஜ் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி