கிருஷ்ணகிரி மாவட்டம்
ஏர்ராண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் மகன் வினோத் என்பவர் கடந்த
2022ல் படித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலைக்கு போகும் நபர்களை குறிவைத்து
தனக்கு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளை தெரியும் என கூறி கிருஷ்ணகிரி வாருவாய் கோட்டாச்சியார் அலுவலகம் மற்றும் அரசு டாஸ்மாக் கடையில் அரசு வேலை வாங்கித்
தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏராளமானவர்களிடம்
4 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார்.
இதில் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆனா பிறகு பணிக்கான ஆணை வரத்தால் பாதிக்கப்பட்டவர்களில்
ஒரு சில பேருக்கு பதிவு எழுத்தர் பெயரில் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார்.
இந்த பணி ஆணையை பெற்றவர்கள் ஆனால் வினோத் பணத்தை கொடுக்க முடியாது, உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று கொலை மிரட்டல் விடுத்து வருவதால் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்காணிப்பாளர் தங்கத்துரையை நேரில் சந்தித்து அரசு வேலை வாங்கித் தருவதாக ஒவ்வொரு
இரண்டு ஆண்டுகளாக பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். எனவே அரசு முத்திரையுடன், போலியான பணி நியமன ஆணை வழங்கிய வினோத் என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என் புகார் மனுக்களை கொடுத்தனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில் வினோத் என்பவர் தங்களிடம் ரூ 5 லட்சம் கொடுத்தால் உடனடியாக அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தகள் கூறினார்.