கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணத்திலிருந்து திம்மாபுரம் செல்லும் சாலையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து செல்லும்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த முதியவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இறந்த முதியவர் யார் என்பதையும், விபத்தைக் குறித்தும் காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.