கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மேல்நிலைத் தொட்டி நீர் ஏற்றுவோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் (ஓட்சா ) நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மைக் காவலர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மைக் காவலர்களுக்கு, தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.