கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி கிராமத்தில் வாரம் தோறும் வார சந்தையில் கால்நடைகள் விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று மாடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. இந்த நிலையில் பண்டிகைகள் முடிந்து முடிவடைந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக ஆடு மற்றும் மாட்டு சந்தை மிகவும் மந்தமாக காணப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மாடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான மாடுகள் வியாபாரத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ளன.