கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் 39-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி அன்னபக்ஷிவாகனம், சேஷ வாகனம் மற்றும் ஆஞ்சநேயர் வாகனம் என தினமும் ஒவ்வொரு வாகனத்தில் நரசிம்மர் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7-ஆம் தேதி அன்று திருக்கல்யாணமும், இரவு கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனத்திலும் நரசிம்மர் வலம் வந்தார்.