கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் ஒசூா் உணவுப் பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெரும்பாலான பழக்கடைகளில் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதுபோன்ற ஆப்பிள்களை விற்பவர்களின் மீது நடவடிக்கை எடுத்து கடைக்கு சீல் வைக்கப்படும் என்று வியாபாரிகளிடம் அதிகாரிகள் எச்சரித்தனர்.