மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழாவை ஓட்டி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை மேம்பாலம் அருகே தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவச் சிலையின் மூடியிருந்த திரையை அகற்றி முன்னாள் திமுக எம்எல்ஏ டி. செங்குட்டுவன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது தொடர்பாக வி. ஏ. ஓ கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.