மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைவோம் - உறுப்பினர் சேர்க்கை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி சூளகிரி வடக்கு ஒன்றியம் பேரிகை ஊராட்சி கும்பர் தெரு வாக்குசாவடி எண் 99 இல் நிகழ்ச்சிக்கு ஓசூர் எம். எல். ஏ. ஒய். பிரகாஷ் கலந்துக்கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். போது மக்களிடம் 4 ஆண்டு கால தி. மு. க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே தமிழகத்தை காக்க அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்றார்.