ஓசூர் அருகே பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு பூஜை

80பார்த்தது
ஓசூர் அருகே பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரணபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மாசி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றது. 

முன்னதாக, மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் ஆராதனைகளும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு யாகசாலையில் பூர்ண ஆகுதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி