கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார், பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த நபரிடம் போலீசார் சோதனை செய்த போது அவரிடம் 3½ கிலோ குட்கா வைத்திருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த முரளிதரன் (21) என்பதும், பெங்களூருவில் இருந்து பேருந்தில் குட்கா கடத்தி வந்ததும் தெரிந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.