ஓசூர் அருகே ஐ. டி. ஐ. மாணவர் விபத்தில் உயிரிழப்பு

85பார்த்தது
ஓசூர் அருகே ஐ. டி. ஐ. மாணவர் விபத்தில் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் விஜய் (17) இவர் தனியார் ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 7-ஆம் தேதி அன்று இரவு விஜய் பாகலூர்-ஓசூர் சாலையில் உள்ள திப்பனப்பள்ளி அருகில் டூ வீலரில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஜய் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி