ஓசூர் அருகே 3 வயது சிறுவனை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகொண்டபள்ளியில் வீட்டின் அருகே சிறுவன் விளையாடிய போது நாய் அவனை கடித்தது. இதன் காரணமாக சிறுவனுக்கு உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட காயத்திற்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. அதிகரிக்கும் தெருநாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.