தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள திம்மனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (48). கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியில் தங்கி, கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை டூவீலரில் தளியில் இருந்து ஓசூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூனப்பள்ளி அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி டூவீலர் மீது பயங்கரமாக மோதியதில் பலத்த காயமடைந்த மாதேஷ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.