ஓசூர்: வீடு புகுந்து பெண்ணிடம் 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

85பார்த்தது
ஓசூர்: வீடு புகுந்து பெண்ணிடம் 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் என். டி. ஆர். நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் நிலையில் அந்த பகுதியில் உள்ள சிவாஜி நகர் கார்த்திகேயன் தெருவில் உள்ள வினோத் என்பவரது வீட்டுக்கு நேற்று (மே 8) இரண்டு மர்ம நபர்கள் வந்து வீட்டில் இருந்த வினோத்தின் மனைவி கீர்த்தியிடம் (31) உங்கள் வீட்டு கழிவு நீர் குழாயை பாதாள சாக்கடையில் இணைக்கும் பணிக்காக வந்துள்ளோம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

கீர்த்தியிடம், ஒரு வாளியில் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டனர். வீட்டின் உள்ளே சென்றபோது அவரை பின் தொடர்ந்த கீர்த்தி கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி