ஓசூர்: லாரி மோதி வாலிபர் பலி

58பார்த்தது
ஓசூர்: லாரி மோதி வாலிபர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குருவாயூரப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவருடைய மகன் ராகுல் (26) இவர் கடந்த 5-ஆம் தேதி அன்று டூவீலரில் இ.எஸ்.ஐ. ரிங் ரோடு அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற லாரி டூவீலர் மீது மோதியது. 

இந்த விபத்தில், ராகுல் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராகுல் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி