கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் புகழ்பெற்ற மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயில் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேர்த் திருவிழாவில், தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரம் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விழாவை ஒட்டி, பாக்குத் தட்டு மற்றும் பேப்பர் தட்டு, இலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
ஒசூர் மாநகராட்சி சார்பில் 160 தூய்மைப் பணியாளர்களை கொண்டு சுழற்சி முறையில் இரவு, பகலாக முக்கிய சாலைகளில் 240-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் இரவு பகலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் திருவிழாவை ஒட்டி தேர்பேட்டை மற்றும் மலைமீது பக்தர்கள் போட்டுச் சென்ற 65 டன் குப்பைகள் கூடுதலாக அகற்றினர்.