கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

1555பார்த்தது
அரூர் அருகே உள்ள வீரப்ப நாயக்கன்பட்டிகிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா. இவரு டைய மகள் சந்தியா (வயது 19). இவர் காரிமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் பி. எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் வீட்டில் இருக்கும் போது அடிக்கடி செல்போ னில் பேசிக் கொண்டிருந்த தாககூறப்படுகிறது. படிக்கும் நேரத்தில் செல்போனில் பேச வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோர் கூறி உள்ளனர். இத னால் சந்தியா, மனவேதனை அடைந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வீட்டில் உள்ள ஒரு அறையில் சந்தியா தனது துப்பட்டாவில் தூக்குப் போட்டு கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்ல முயன்றனர். அப் போது சந்தியா இறந்து விட் டது தெரியவந்தது.

இது பற்றி தகவல் அறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்பின்னர் போலீசார், சந்தியா வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கல்லூரிமாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி