தர்மபுரி: சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் அதிரடி கைது

78பார்த்தது
தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சோதனையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததை எதிர்த்து தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக மாநில நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று தர்மபுரி மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சேர்ந்தவர்கள் தர்மபுரி மாவட்டம் 4 ரோடு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் ஆறுமுகம், மகளிர் அணி மாவட்ட தலைவர் சங்கீதா, கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழலை கண்டித்தும் அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்தும் அவரை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது திடீரென தர்மபுரி 4 ரோடு முன்பாக சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி