கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தாதம்பட்டி பால்சொசைட்டி முன்பு பாலுக்கான கொள்முதல் விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கரவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் சங்க தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலுக்கான கொள்முதல் விலையினை ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தி, பசும்பால் ஒரு லிட்டருக்கு 45 ரூபாயும், எருமைப்பால் ஒரு லிட்டருக்கு 54 ரூபாயும், நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பால் உற்பத்தியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.