கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த பெருகோனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (50) இவரது மனைவி கீதா (45) இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் ரஞ்சித்குமார் (27) வியாபாரி. இவரும் இதே பகுதியை சேர்ந்த எம். எஸ்சி. பட்டதாரியான தீபிகா (23) என்பவரும் காதலித்து வந்தனர். காதலுக்கு இருதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அதனை பொருட்படுத்தாத காதலர்கள் வெளியேறி அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சரவணன், கீதா விஷம் குடித்து மயங்ளி நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.