கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ்தி ஆவலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்ன பில்லப்பா (48) கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் ஓசூர் சிப்காட் ஜூஜூவாடி தனியார் நிறுவனம் அருகே சின்ன பில்லப்பா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து சிப்காட் போலீசார் உடலை இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.