போச்சம்பள்ளி அருகே இரண்டு கோவில்களில் நகை, பணம் திருட்டு.

81பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்துள்ள தட்டராஅள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கக்கு மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் கோவில் கருவறை பூட்டை உடைத்து அம்மனின் கழுத்தில் இருந்த 10 கிராம் குண்டு மணிகள் தாலி திருடி சென்றனர்.

அதேபோல் கரியகவுண்டனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் கோவில் மாரியம்மன் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்கத் தாலி மற்றும் உண்டியல் உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி