கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள குண்டுப்பட்டியை சேர்ந்தவர் சலபதி (27). லாரி டிரைவரான இவர் வெளிமாவட்டங்களுக்கு லாரிகளில் லோடுகளை ஏற்றி செல்வது வழக்கம். அப்போது நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அபிசல் மியா (25) என்பவருடன் சலபதிக்கு காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கும் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அபிசல் மியா வீட்டில் தூக்கிட்டு கொண்ட போது அருகில் இருந்தவர்கள் கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே சென்று அபிசல் மியாவை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தெடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.