ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் அரசு அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொதுமக்கள் குடியிருப்புகள் மீது அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மாவட்ட வளர்ச்சித்துறை கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தப்பா என்பவர் உயிரிழந்தார். பொறுப்புமிக்க அரசு அதிகாரியை இழந்துவிட்டதாக அம்மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், திணறும் பாகிஸ்தான் குறுக்குவழியை தேர்வு செய்துள்ளது.