போலி தங்க காசுகள் விற்க முயன்ற பெண் கைது

79பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை பஸ் நிலையம் அருகே உள்ள சாய்பாபா கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் 34. இவர் இன்று மாலை 4 மணியளவில் பஜனைமடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் கையில் தங்கக் காசுகளை வைத்துக்கொண்டு அங்கிருந்த இரண்டு பெண்களிடம் விற்க முயன்றுள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த ஆனந்த் அருகிலுள்ள பெண்கள் உதவியுடன் பிடித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணகிரி அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளார்.

விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவர் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அடுத்த நெய்க்காரப்பட்டி ஸ்ரீரங்கத் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி பூங்கொடி (30) என்பதும், அப்பகுதியில் கூலி வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் போலியான தங்க காசுகள் வைத்துக்கொண்டு மோசடியாக விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது. அதனையடுத்து அவரிடம் இருந்த ஒரு பக்கம் லட்சுமி படம், மறு பக்கம் 22 கேரட் கோல்ட் 1996 என பொறிக்கப்பட்ட 12 போலி தங்க காசுகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் மோசடியில் ஈடுபட்ட பூங்கொடி மீது இரண்டு வழக்குகளின் கீழ் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி