கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மருதூர் பகுதியில் வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த தங்கராசு (70) மற்றும் ராஜேந்திரம் பகுதியில் வீட்டின் அருகே மதுவிற்ற பரமேஸ்வரி (63) ஆகிய 2 பேரை பிடித்த குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.