கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுமருதூர் கிராமத்தில் தினந்தோறும் பகல் நேரத்தில் தெரு நாய்கள் ஊருக்கு வெளிப்புறம் சுற்றித் திரிவதும், இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு நாய்கள் ஒன்றுக்கொன்று கடித்துக் கொள்கிறது.
மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை தெரு நாய்கள் அச்சுறுத்தி வருகிறது.
அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் மருதூர் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேட்டுமருதூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.