கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் ஊராட்சி அ. உடையப்பட்டியில் தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் பெற்று வந்தனர். இந்த ஆண்டு கழுகூர் ஊராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்திருந்தனர்.
தற்போது அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் இந்த ஆண்டு கழுகூர் ஊராட்சியில் அமைக்கவில்லை.
இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை தங்களுடைய வீடுகளில் சேமித்து வைத்துள்ளனர்.
அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி வேளாண்துறை அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தும்
இதுவரை நேரடி கொள்முதல் நிலையம் அமைக்காததால் உடனடியாக நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி அ. உடையாபட்டி பேருந்து நிறுத்தத்தில் டிராக்டரை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், எஸ்ஐ பாலசுப்பிரமணியன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் வேளாண்மை துறை அலுவலர்களை விரைந்து அழைத்து தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் கழுகூர் ஊராட்சியில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சாலை மறியல் செய்த விவசாயிகளிடம் தோகைமலை போலீசார் உறுதி அளித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை விளக்கிக் கொண்டனர்.