கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதை ஒட்டி குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என குளித்தலை பகுதி சமூக ஆர்வலர்கள் சார்பில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை இன்று அளித்துள்ளனர்.