அய்யர்மலையில் திருப்பணி ஆலோசனைக் கூட்டம்

65பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் திருப்பணி நடத்துவது குறித்து இன்று காலை இந்து சமய அறநிலைத்துறை திருப்பூர் மண்டல இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அய்யர்மலையின் உச்சியில் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் அய்யர்மலையின் உச்சியில் உள்ள சுரும்பார் குழலி உடனுறை ரத்தனகிரீஸ்வரர், அம்மன் மற்றும் ராஜலிங்கம் ஆகிய சுவாமிகள் தவிர மற்ற பரிவார மூர்த்திகளுக்கு திருப்பணி நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது மலை அடிவாரத்தில் உள்ள கம்பத்தடி, காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி, பொன்னிடும் பாறை, நால்வர் சன்னதி, வலம்புரி விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி ஆகியவற்றிற்கு திருப்பணி செய்வதற்காக பாலாலயம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வரும் சித்திரை மாதம் அய்யர்மலையில் சித்திரை தேரோட்டம் நடைபெறுவதால் தேரோட்டம் முடிந்த பிறகு மலை உச்சியில் உள்ள சுரும்பார் குழலி அம்மன், ரத்தனகிரீஸ்வரர் மற்றும் ராஜலிங்கம் சாமிகளுக்கு பாலாலயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை குடிப்பாட்டுக்காரர்களும், உபயதாரர்களும் ஆலோசனை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆய்வாளர் மாணிக்க சுந்தரம், அய்யர்மலை கோயில் செயல் அலுவலர் தங்கராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி