கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல குட்டப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (370. இவர் குட்டப்பட்டி நான்கு ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற சரவணக்குமார் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 20 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.