மழையினால் நெற்ப்பயிர்கள் நாசம், விவசாயிகள் வேதனை

58பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் சதாசிவம் என்கிற விவசாயி நெல் விவசாயம் செய்திருந்தார். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நெல் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி முளைப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டதாகவும், விவசாயத்தை நம்பி தான் எங்கள் வாழ்வாதாரம் என்று கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.

இதனை எடுத்து எங்களுக்கு முறையான நிவாரண உதவி வழங்க வேண்டும் என அரசு அதிகாரியிடம் கேட்டுக்கொள்கிறேன் என மிக வேதனையுடன் விவசாயி கூறினார்.

தொடர்புடைய செய்தி