கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாடக்காப்பட்டியைச் சேர்ந்தவர் வைரன் மனைவி பெரியக்காள் வயது 73. இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை, பல இடங்களில் தேடியும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
ஆகையால் அவரின் பேரன் மணிவேல் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.