எழுநூற்று மங்கலத்தில் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

66பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே எழுநூற்றுமங்கலத்தில் ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ மலையாள கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது.


இக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.

புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, நாடி சந்தனம், லட்சார்ச்சனை, திரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட இரண்டு கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.


இன்று காலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனித நீர் கும்பத்தினை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

பின்னர் வானில் கருட பகவான் வட்டமிட்டதை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க புனித நீரினை கலசத்திற்கு ஊற்றினர்.

அதனைத் தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் மூலவர்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

எழுநூற்று மங்களத்தை சுற்றியுள்ள திரளான பொதுமக்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி