திருச்சி மாவட்டம் தொப்பம்பட்டி அருகே படுகளம் பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் குமரேசன் (22). இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் கொசூர் கடைவீதி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த தோஸ்த் வாகனம் மோதியதில் குமரேசன் படுகாயம் அடைந்தார். புகாரின் பேரில் தோஸ்த் வாகன ஓட்டுனர் செந்தில்குமார் மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு.