முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே குளித்தலை நகர திமுக சார்பில் கலைஞரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கினார்.
அதேபோல பெரியபாலம் பேருந்து நிறுத்தம் அருகே திமுக மாநில வர்த்தக அணி சார்பில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா தலைமையில் டாக்டர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் சகுந்தலா, மாநில செயற்குழு உறுப்பினர் சிவராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜாபருல்லா, நகர பொருளாளர் தமிழரசன், நகர துணை செயலாளர் செந்தில்குமார், இன்ஜினியர் கணேசன், நகர தொண்டர் அணி அமைப்பாளர் மது, உள்ளிட்ட நகர திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் பேருந்து நிறுத்தம் அருகே கலைஞரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், நகர் மன்ற தலைவர் சகுந்தலா உள்ளிட்ட நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.