கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சி பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் சாந்தி 44. இவருக்கும் அத்தை உறவு முறையான பாலாமணி என்பவருக்கும் அந்தோணியார் புறம் பகுதியில் உள்ள பொது தோட்டத்தில் நிலம் பிரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாலாமணி கடந்த மாதம் 24 ஆம் தேதி தோட்டத்தில் இருந்த மரங்களை வெட்டியதாகவும் இதுகுறித்து கேட்ட சாந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கியுள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்ததின் பேரில் தோகைமலை போலீசார் பாலாமணி மீது நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.