கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 8 ஆவது வார்டு சண்முகானந்தா தியேட்டர் பின்புறம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த நேர்முக உதவியாளரிடம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நேற்று மனு அளித்தனர். அதில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வருவதாகவும், சொந்தமாக நிலமோ, வீடோ இல்லாத எங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி குடும்பத்தை பாதுகாத்திட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வில் சிபிஐஎம் குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்துசெல்வன் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்