தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வு ஆலோசனை கூட்டம்

83பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமகாதானபுரத்தில் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோவில் ஆடி 18 திருவிழா முன்னிட்டு ஆலோசனை கூட்டம் குளித்தலை ஆர்டிஓ தனலெட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது. டிஎஸ்பி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஆடி 19ஆம் நாள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் மகாலட்சுமி அம்மன் திருக்கோவில் செயல் அலுவலர், கோவில் பரம்பரை பூசாரி, விழா குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி