விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கரூர் கிழக்கு மாவட்டம், தோகைமலை மேற்கு ஒன்றியம், பாதிரிபட்டி ஊராட்சி, கோட்டபட்டியில், முகாம் செயற்குழு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. முகாம் பொறுப்பாளர் வேணு மலைவேல் தலைமை வகித்தார். தோகைமலை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் நோக்க உரையாற்றி, இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பு செய்தார்.
மண்டல செயலாளர் தமிழாதன், கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் என்கிற ஆற்றல் அரசு, மாவட்ட பொருளாளர் அவிநாசி ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்
இந்நிகழ்வில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், தொகுதி துணை செயலாளர் லட்சுமணன், மாவட்ட அமைப்பாளர் பாலகுமார், மாவட்டத் துணை அமைப்பாளர் ராமன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய துணை அமைப்பாளர் சரத்குமார், ராஜலிங்கம் மகளிர் அணி ஜோதிமணி மற்றும் கட்சியை சேர்ந்த கருப்பையா, பால்ராஜ், ராஜலிங்கம், வெள்ளைச்சாமி, குணசேகர், கோகுல், அன்னலட்சுமி, அமுதலட்சுமி, முத்துலட்சுமி, ஜெயந்தி, ராமு, ஸ்ரீநாத், பூபேஷ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், இந்திரா நகர், கோட்டப்பட்டி, முகாம் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.