கரூர் மாவட்டம் குளித்தலை அருகே போத்தராவுத்தன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் 48. இவர் நேற்று மோலப்புடையனூர் சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் எதிரே ஸ்ரீரங்கன் ஓட்டி வந்த லாரி மோதியதில் முருகேசன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் மனைவி முத்து புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.