கலைஞரின் கனவு இல்லம் 26 பயனாளிகளுக்கு அனுமதி ஆணை

80பார்த்தது
கலைஞரின் கனவு இல்லம் 26 பயனாளிகளுக்கு அனுமதி ஆணை
கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 26 பயனாளிகளுக்கு ரூ. 3. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்ட அனுமதி ஆணை உத்தரவு வழங்கும் விழா குளித்தலை சட்டமன்ற அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார். இதில் 13 ஊராட்சிகளை சேர்ந்த 26 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி, திமுக குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி