கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரம் பகுதி வழியாக தென்கரை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் பணிக்காக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. வாய்க்காலில் 500 கன அடி நீர் வீதம் தண்ணீர் திறப்பால் தற்காலிக பாலம் இன்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் சுற்றியுள்ள கிராம மக்கள் 10 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.