கரூர்: வாய்க்காலில் குளிக்க சென்ற போது இரு தரப்பினரிடையே தகராறு

60பார்த்தது
கரூர்: வாய்க்காலில் குளிக்க சென்ற போது இரு தரப்பினரிடையே தகராறு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கீர்த்தனா 29 இவர் கடந்த 18ஆம் தேதி தனது வீட்டின் முன்பு வாய்க்காலுக்கு குளிக்கச் சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா என்பவரும் குளிக்க வந்துள்ளார். அப்போது ஜாதையாக பேசிய அர்ச்சனா அவரின் பெற்றோரிடம் சொல்லியுள்ளார். 

இதில் கீர்த்தனா வீட்டிற்கு வந்தபோது அங்கு வந்த அர்ச்சனா வீட்டாருக்கும் கீர்த்தனா தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு கையால் அடித்து கட்டையால் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் கீர்த்தனாவின் மாமனார் பன்னீர்செல்வம், கணவர் அர்ஜுனன் ஆகிய இரண்டு பேர் காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கீர்த்தனா அளித்த புகாரின் பேரில் ராமசாமி, கலா ஆகிய இரண்டு பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி